suicide bomber [Image Source : Twitter/@Pranjal_Writes]
பாகிஸ்தானில் பாதுகாப்பு வாகனத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வடமேற்கு பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரின் தொடரணி மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 6 துணை ராணுவப் படையினர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். ஃபிரான்டியர் கார்ப்ஸ் (எஃப்சி) தலைமையகம் அமைந்துள்ள பெஷாவரின் ஆடம்பரமான குடியிருப்புப் பகுதியான ஹயதாபாத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
பெஷாவர் கன்டோன்மென்ட் காவல் கண்காணிப்பாளர் வகாஸ் ரபீக் கூறுகையில், எஃப்சி கான்வாய் மீது நடந்த தாக்குதலில் துணை ராணுவப் படைகளின் இரண்டு வாகனங்கள் அழிக்கப்பட்டன மற்றும் ஆறு எஃப்சி வீரர்கள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர் என்று கூறினார்.
மேலும், காயமடைந்தவர்கள் பெஷாவரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இரண்டு வீரர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…