Categories: உலகம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1000 ஆக அதிகரிப்பு!!

Published by
கெளதம்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் நேற்று அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் நேற்று மதியம் 12:11 மணிக்கு ரிக்டர் அளவில் 6.1 ஆகவும், மதியம் 12:19 மணிக்கு ரிக்டர் அளவில் 5.6 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மதியம் 12:42 மணிக்கு  6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டபோது குடியிருப்பாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இருந்தாலும், நேற்று 100 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து, ஐக்கிய நாடுகள் சபை 320 பேர் இறந்ததாக முதற்கட்ட புள்ளிவிவரத்தைக் கொடுத்தது.

பின்னர் அந்த எண்ணிக்கை இன்னும் சரிபார்க்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று (8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை) இந்த பயங்கர நிலநடுக்கத்தில் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல கட்டடங்கள் இடிந்து தரை மட்டமாகியதாகவும், இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 3000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 1,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டது மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து காணப்பட்டனர். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானில் மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.

Published by
கெளதம்

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

4 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

5 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

5 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

6 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

7 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

8 hours ago