Categories: உலகம்

பாகிஸ்தான் மசூதி அருகே குண்டுவெடிப்பு தாக்குதல்.! 52 பேர் உயிரிழப்பு, 130க்கும் மேற்பட்டோர் காயம்.!

Published by
செந்தில்குமார்

பாகிஸ்தானில் பல இடங்களில் முகம்மது நபியின் பிறந்தநாளான மிலாதுன் நபி பெருநாளை கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் பலுசிஸ்தான் மாகாணத்தின் உள்ள மசூதிக்கு அருகே முகம்மது நபியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரார்த்தனை நடத்த மக்கள் ஒன்றாக கூடியிருந்தனர். அப்பொழுது திடீரென மசூதிக்கு அருகில் வெடிகுண்டு வெடித்துள்ளது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் அப்பகுதியில் கூடியிருந்தவர்களில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 52 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சமீப காலங்களில் பல பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்ட மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதீனா மசூதிக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பு குறித்து தகவல் அறிந்த மீட்பு மற்றும் காவல்துறையினர் சத்துவ இடத்திற்கு வந்தனர். மீட்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்புக்கு தற்கொலைப்படை தீவிரவாதி தான் காரணம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கராச்சி நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பலுசிஸ்தானில் ஒரே மாவட்டத்தில் ஒரு மாதத்தில் குண்டுவெடிப்பு நடப்பது இது இரண்டாவது முறையாகும்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

9 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

9 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

10 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

11 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

13 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

14 hours ago