சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தைவானியர்களுக்கு சீனா அழைப்பு.
உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவல் கடந்த ஆண்டு முதல் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது, இதற்கான தடுப்பு நடவடிக்கைகளாக ஒவ்வொரு நாடும் அந்நாட்டு மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது.
இதையடுத்து சீனா அரசாங்கம் வெள்ளிக்கிழமை அன்று சீன தயாரிப்பான கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தைவானியர்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. இதனுடன் தைவான் தடைகளை நீக்கி அதன் மக்களை “மிகவும் பயனுள்ள” சீன தடுப்பூசிகளை பெற அனுமதிக்குமாறு அந்நாட்டுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
தைவான் உள்நாட்டு நோய்தொற்று அதிகரிப்பில் கடுமையாக போராடி வருகிறது, இதையடுத்த சீனா ஜனநாயக ரீதியாக தைவான் தீவுக்கு தடுப்பூசிகளை அனுப்ப பலமுறை முன்வந்துள்ளது. ஆனால் சீன தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளதோடு அவற்றைப் பயன்படுத்தவும் அந்நாடு அனுமதிக்கவில்லை.
சீனாவின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தைவான் கண்டிப்பாக இணங்கினால், கொரோனாக்கு எதிராக தடுப்பூசி போட தைவான் மக்கள் சீனாவுக்கு வரலாம் என்று சீனாவின் தைவான் விவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் தைவானின் 23.5 மில்லியன் மக்களில் 3% மட்டுமே குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவின் சலுகை பல தைவானியர்களை கவர்ந்திழுக்க வாய்ப்பில்லை என்றும் கடந்த மாதம் தைபேயின் தேசிய செங்கி பல்கலைக்கழகத்தின் கருத்துக் கணிப்பில் பெரும்பாலான மக்கள் சீன தடுப்பூசி பெற தயாராக இருக்க மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது சிலருக்கு கவர்ச்சிகரமானதாக இருக்கலாம், ஆனால் பலரால் செலவுகளைச் சமாளிக்க முடியாது என்பதுதான் பிரச்சினை என்று ஓரு தைவான் அதிகாரி கூறியுள்ளார், தைவானுக்கும் சீனாவிற்கும் இடையில் பயணம் செய்யத் தேவையான தனிமைப்படுத்தலின் வாரங்கள் மற்றும் செலவுகளை அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…