Chopsticks [Imagesource : NDTV]
வியட்நாமை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் சுமார் ஐந்து மாதங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர், டோங் ஹோயின் கியூபா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
பின் மருத்துவர்கள் அவருக்கு சி.டி ஸ்கேன் செய்ததில், அந்த நபர் டென்ஷன் நியூமோசெபாலஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அடுத்தடுத்த பரிசோதனைகள் மனிதனின் அறிகுறிகளின் அசாதாரண நிலையை வெளிப்படுத்தியது.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஒரு ஜோடி சாப்ஸ்டிக்ஸ் அவரது மூக்கு வழியாக நுழைந்து மூளையை அடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்பு வியட்நாமில் குடித்துக்கொண்டிருந்தபோது சண்டையில் ஈடுபட்டதாகவும், சண்டையின் போது சாப்ஸ்டிக்ஸ் குச்சியால் மூக்கில் குத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மருத்துவர்கள் மூக்கு வழியாக மேற்கொள்ளப்பட்ட எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம், மருத்துவர்கள் வெற்றிகரமாக சாப்ஸ்டிக்குகளை அகற்றினர். அதனை தொடர்ந்து, மூளை மற்றும் முதுகுத் தண்டு திசுக்களில் உள்ள தமனி மற்றும் நரம்புக்கு இடையே உள்ள ஃபிஸ்துலாவை மூட மைக்ரோ சர்ஜரி செய்துள்ளனர். தற்போது அந்த நபர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…