Categories: உலகம்

Singapore: சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றார் தர்மன் சண்முகரத்னம்.!

Published by
கெளதம்

சிங்கப்பூரின் புதிய அதிபராக பதவியேற்று கொண்டார், இந்திய வம்சாவளி சேர்ந்த பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்னம்.

சிங்கப்பூர் அதிபராக பொறுப்பில் இருந்த ஹலீமா யாக்கோப்பின் பதவி காலம் நிறைவு பெரும் முன்பே கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி சிங்கப்பூர் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் தமிழ் வம்சாவளியாளரான தர்மன் சண்முகரத்னம், இங் கொக் சொங், டான் கின் லியான் ஆகியோர் இறுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெளிநாடு வாழ் சிங்கப்பூர்காரர்கள் உட்பட சுமார் 27 லட்சம் பேர் வாக்களித்தனர். இதில், தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதக வாக்குகளை பெற்று பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

முன்னதாக, சிங்கப்பூர் அதிபராக இருந்த ஹலீமா யாக்கோப்பின் பதவி காலம் நேற்றுடன் (செப்டம்பர் 13) நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக பதவியேற்று கொண்டார் தர்மன் சண்முகரத்ன. இன்று நடைபெற்று வரும், பிரமாண்டமாக விழாவில் பதவி பதவியேற்றார்.

இலங்கை தமிழர் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் , புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர். கடந்த 2001ஆம் ஆண்டு முதல், 2006, 2011, 2015, 2020 என தொடர்ச்சியாக சிங்கப்பூர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2015- 2023 காலகட்டம் வரை சமூக கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராக பொறுப்பில் இருந்தவர். 2011 முதல் 2023 வரை சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 2011 முதல் 2019 மே மாதம் வரை சிங்கப்பூரின் துணைப் பிரதமராகவும் பணியாற்றியவர். கடந்த மே மாதம் தனது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி பிரதமர் தேர்தலுக்காக தயார் ஆகி வெற்றி கண்டுள்ளார் தமிழ் வம்சாவளியான தர்மன்.

Published by
கெளதம்

Recent Posts

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

48 minutes ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

1 hour ago

வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. 2-வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…

2 hours ago

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

10 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

11 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

12 hours ago