HeadPhone Users[file image]
WHO : உலக சுகாதார நிறுவனம் தற்போது செவித்திறன் பாதிப்பு பற்றிய சில அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாம் பாட்டு கேட்பதற்கு பயன்படுத்தும் ஹெட் போன்களால் நம் காதுகளுக்கு அதிக ஆபத்து இருப்பதை நாம் ஒரு போதும் அறிந்திருக்கமாட்டோம். அப்படியே அறிந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் அதிக சத்தம் வைத்து கொண்டு பாடல்களை கேட்போம். இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் நமது செவித்திறன் பாதிப்படைந்து நமக்கு இருக்கும் கேட்கும் திறன் முற்றிலும் செயலிழந்து விடும்.
உலகம் முழுவதும் உள்ள 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் 20 சதவீதம் பேருக்கு மட்டும் காது கேட்கும் கருவி உள்ளதாக கூறுகிறார்கள் மீதம் உள்ளவர்கள் இதன் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது 217 மில்லியன் மக்கள் காது கேக்காமல் பாதிப்படைந்துள்ளனர். இது உலகமக்கள் தொகையில் சுமார் 21.52 சதவீதமாகும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்து உள்ளது.
இது வருகிற 2050 ஆண்டில் இந்த எண்ணிக்கை படிப்படியாக 322 மில்லியனாக உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது போன்ற செவித்திறன் இழப்பு பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையிலும் அவர்களது குடும்பங்களிலும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது என் தெரிவிக்கின்றனர். மேலும், இதன் சிகிச்சைக்காக மட்டும் உலகளவில் சுமார் 21 கோடியே 80 லட்சத்திற்கும் மேல் செலவாகிறது என கண்டுப்பிடித்துள்ளனர்.
மேலும், அடுத்த 30 ஆண்டுகளில் இதனால் பாதிப்படையும் நபர்களில் ஒருவருக்கு காதில் புது வித பாதிப்பு ஏற்படலாம் எனவும் அது நமது எதிர்கால சந்ததியை கூட பாதிக்கலாம் எனவும் கணித்துள்ளனர். நாம் நமது பொழுது போக்கிற்காக கேட்க உபயோகிக்கும் ஹெட்போன்களின் தாக்கத்தை தற்போதாவது புரிந்து கொண்டு அதை குறைவாக உபயோகித்து வருங்கால சந்ததிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே நாம் அமைய வேண்டும்.
எனவே, மொபைல் போன், ஹெட்போன்களை உபயோகிக்கும் போது குறைவான சத்தத்தை வைத்து கொண்டு குறைவான சமயம் மட்டுமே அதற்கென நாம் செலவழித்தால் அது போதுமானது. மிக முக்கியமாக நமது குழந்தைகளிடம் இது போன்ற ஹெட்போன்களை கொடுக்காமலும் அவர்களே அறியாமல் உபயோகித்தாலும் அதனால் விளையும் தீங்கை எடுத்து கூறி நாம் பாதுகாப்போம்.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…