[Image source : ANI]
இம்ரான் கான் காவலில் இருக்கும்போது கொல்லப்பட வாய்ப்பு இருப்பதற்கான அச்சம் அதிகரித்து வருகிறது. – அமெரிக்க முன்னாள் தூதர் சல்மே கலீல்சாத்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, ஊழல் குற்றசாட்டுகள் தொடர்பாக அண்மையில் சிறப்பு பாதுகாப்பு படையினர் மூலம் இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்திலேயே அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் விசாரணைக்காக நீதிமன்ற காவலில் இருக்கிறார். அவரது ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பொது சொத்துக்களை சேதப்படுத்தி வருகின்றனர். இதனால், பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் சல்மே கலீல்சாத், இம்ரான் கானை காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், இம்ரான் கான் காவலில் இருக்கும்போது கொல்லப்பட வாய்ப்பு இருப்பதற்கான அச்சம் அதிகரித்து வருகிறது. என்றும், இன்று நீதிமன்றத்தில் நீதிபதி முன்பும் இம்ரான் கான் இந்த செய்தியையே வெளிப்படுத்தினார் எனவும் கலீல்சாட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…