[file image]
வியட்நாம் தலைநகர் ஹனோயில் 9 அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள ஒன்பது மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், உள்ளூர் நேரப்படி நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. குடியிருப்பாளர்கள் பலர் வீட்டில் இருந்தபோது இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட பலர் காயம் அடைந்து மருத்துமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறுகிய பாதையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ள நிலையில், நீண்ட நேரத்துக்கு பிறகு இன்று காலை தான் தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பார்க்கிங் தளத்தில் தீப்பிடித்த நிலையில், குடியிருப்பில் தீ பரவியதாக கூறப்படுகிறது. மேலும் தீ விபத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…
மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…
சென்னை : கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…
சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…
சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…