Li Keqiang [file image]
சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் இன்று காலை காலமானார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) தலைவரான அவர் 10 ஆண்டுகள் சீனாவின் பிரதமராக பதவி வகித்திருக்கிறார். 68 வயதாகும் அவர், கடந்த மார்ச் மாதம் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து விடுமுறையை கொண்டாட ஷாங்காய் சென்றிருந்தபோது திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என கூறப்படுகிறது. தற்போது, அவரது மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லீ கெகியாங்-க்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஷாங்காய் நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார் என்றும் அந்நாட்டு பிரபல ஊடகமான சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
லீ தனது அவரது பதவிக் காலத்தில், வேலைகள் மற்றும் செல்வத்தை உருவாக்கும் தொழில்முனைவோருக்கு நிலைமைகளை மேம்படுத்துவதற்கான அறிவுரைகளை வழங்கி வந்தார். அன்ஹுய் மாகாணத்தில் உள்ள ஹெஃபியில் பிறந்த இவர் சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவர்.
லீ கெகியாங் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சீனாவின் பொருளாதாரத்தில் உருமாற்ற சீர்திருத்தத்தை கொண்டு வந்த தலைவரான டெங் சியாபிங்கின் சிலைக்கு மாலை அணிவித்து, சீனா அணைத்து தடைகளையும் தண்டி பொருளாதாரம் நிறுத்தப்படாது. மஞ்சள் நதி என்றும் பின்னோக்கிப் பாயாது என்று கூறியிருந்தார்.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…