Categories: உலகம்

விதிகளை மீறிய இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்.? எம்பி பதவி பறிப்பு.!

Published by
மணிகண்டன்

அரசு விதிகளை மீறியதாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் எம்பி பதவியில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் தான் கொரோனா பரவலும், அதன் கடும் கட்டுப்பாடுகளும் அமலில் இருந்தன. அந்த சமயம் தனது இல்லத்தில் பிரமாண்ட பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடினார் போரிஸ் ஜான்சன் என அவர் மீது புகார் எழுந்தது.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக நாடாளுமன்ற குழு அவர்மீது குற்றம் சாட்டியது. இதற்கு அவர் தவறான விளக்கங்களை நாடாளுமன்றத்திற்கு  அளித்ததாகவும் போரிஸ் ஜான்சன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதற்கிடையில், அவர் பிரதமர்பொறுப்பில் இருந்து விலகி, ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அரசு விதிகளை மீறிய குற்றத்திற்காகவும், நாடாளுமன்றதிற்கு தவறான தகவல்களை அளித்ததாக கூறப்பட்ட புகார் குறித்தும், நாடாளுமன்ற குழுவானது போரிஸ் ஜான்சனை எம்பி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய பரிந்துரை செய்தது.

இதனை அடுத்து, தனது எம்பி பதவியை இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியுள்ளது. ராஜினாமா செய்த பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் மீது நாடாளுமன்ற குழு இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கும் என தான் நினைக்கவில்லை என்றும், நாடாளுமன்றத்திற்கு தவறான தகவல்களை கொடுத்ததாக தன் மீது சுமத்தப்பட்ட புகாருக்கு உரிய ஆதாரத்தை குழு வெளியிடவில்லை என்றும் போரிஸ் ஜான்சன் குற்றம் சாட்டியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago