Categories: உலகம்

விதிகளை மீறிய இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்.? எம்பி பதவி பறிப்பு.!

Published by
மணிகண்டன்

அரசு விதிகளை மீறியதாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் எம்பி பதவியில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் தான் கொரோனா பரவலும், அதன் கடும் கட்டுப்பாடுகளும் அமலில் இருந்தன. அந்த சமயம் தனது இல்லத்தில் பிரமாண்ட பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடினார் போரிஸ் ஜான்சன் என அவர் மீது புகார் எழுந்தது.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக நாடாளுமன்ற குழு அவர்மீது குற்றம் சாட்டியது. இதற்கு அவர் தவறான விளக்கங்களை நாடாளுமன்றத்திற்கு  அளித்ததாகவும் போரிஸ் ஜான்சன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதற்கிடையில், அவர் பிரதமர்பொறுப்பில் இருந்து விலகி, ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அரசு விதிகளை மீறிய குற்றத்திற்காகவும், நாடாளுமன்றதிற்கு தவறான தகவல்களை அளித்ததாக கூறப்பட்ட புகார் குறித்தும், நாடாளுமன்ற குழுவானது போரிஸ் ஜான்சனை எம்பி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய பரிந்துரை செய்தது.

இதனை அடுத்து, தனது எம்பி பதவியை இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியுள்ளது. ராஜினாமா செய்த பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் மீது நாடாளுமன்ற குழு இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கும் என தான் நினைக்கவில்லை என்றும், நாடாளுமன்றத்திற்கு தவறான தகவல்களை கொடுத்ததாக தன் மீது சுமத்தப்பட்ட புகாருக்கு உரிய ஆதாரத்தை குழு வெளியிடவில்லை என்றும் போரிஸ் ஜான்சன் குற்றம் சாட்டியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

9 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

10 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

11 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

11 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

12 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

13 hours ago