Joe Biden [File Image]
ஜி20 மாநாட்டை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லியில் இருந்து வியட்நாம் புறப்பட்டுச் சென்றார்.
உலகமே உற்று நோக்கும் வகையில், இந்தியா 18வது ஜி20 உச்சி மாநாட்டை தலைமை தாங்கி தலைநகர் டெல்லியில் நேற்று முதல் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. நேற்று துவங்கிய இந்த மாநாடு இன்று இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணமாக, G20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்து வெள்ளிக்கிழமை டெல்லிக்கு வந்து, அதே நாளில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
50 நிமிடங்களுக்கு மேல் நடந்த பேச்சு வார்த்தையில், மோடியும் பைடனும் இருதரப்பு முக்கிய பாதுகாப்பு கூட்டாண்மைக்கு உறுதியளித்தனர். நேற்றைய தினம் ஜி20 உச்சிமாநாட்டின் முதல் அமர்வில் ஜோ பைடன் கலந்து கொண்டார்.
அந்த வகையில், இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் அஞ்சலி செலுத்திய பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் வியட்நாம் புறப்பட்டார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…