Categories: உலகம்

11ம் நாளாக தொடரும் போர் – ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி!

Published by
கெளதம்

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையான போர் தாக்குதல் 11வது நாளாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த ஒசாமா அல்-மசினி என்பவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக ஹமாஸ் அமைப்பினர் தலைமையிடமாக இருக்கும் பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல் என தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் இதுவரை சுமார் 3000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த போர் காரணமாக காசா பகுதியில் வாழும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நிறுத்தினால் பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தயார்.! ஈரான் தகவல்.!

இதற்கிடையில், இஸ்ரேலை சேர்ந்த 199 பேரை பணயக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்து இருந்தது. மேலும், அந்த பணயக்கைதிகளில் வயதானவர்கள், குழந்தைகள், வெளிநாட்டினரும் உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பில்லை என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது, அந்த வகையில், தாக்குதல் நடைபெற்று வரும் கடந்த ஒரு வார காலத்தில் ஹமாஸின் முக்கிய தலைவர்கள் இருக்கும் இடத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்.! ரஷ்யாவின் தீர்மானத்தை நிராகரித்தது ஐ.நா.!

தற்பொழுது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த ஒசாமா அல் மசினி பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இவர் ஹமாஸ் அமைப்பின் வசத்தில் பிடிபட்டிருந்த பணய கைதிகளை கையாளுவதிலும், பயங்கரவாத செயலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். முன்னதாக, ஹமாஸ் பொது உளவுத்துறையின் தலைவர் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலின் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், அது தொடர்பான வீடியோவும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

வெற்றிகரமாக பூமிக்கு வந்தடைந்த டிராகன் விண்கலம்.., வரலாறு படைத்தார் சுபான்ஷு சுக்லா.!!

கலிபோர்னியா : சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேருடன் புறப்பட்ட டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 22…

12 minutes ago

ஓரணியில் இருந்தால் டெல்லி அணியின் திட்டம் பலிக்காது – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

கடலூர் :  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15, 2025) கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.…

31 minutes ago

‘குறிஞ்சிப்பாடியில் காலணி தொழில் பூங்கா’ – முதல்வர் அறிவிப்பு!

கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15, 2025) கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.…

58 minutes ago

பண்ட் அவுட் ஆனார் போட்டி மாறிடுச்சு! தோல்வி குறித்து கில் ஸ்பீச்!

லண்டன் :  ஜூலை 10 முதல் 14 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட்…

2 hours ago

நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைப்பு?

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியை கொலை…

2 hours ago

எங்கள் உள்ளம் கலங்குகிறது…சண்டைக்கலைஞர் மோகன்ராஜ் உயிரிழப்பு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…

3 hours ago