Categories: உலகம்

இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நிறுத்தினால் பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தயார்.! ஈரான் தகவல்.!

Published by
மணிகண்டன்

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையான போர் தாக்குதல் 11வது நாளாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக ஹமாஸ் அமைப்பினர் தலைமையிடமாக இருக்கும் பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல் என தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் தாக்குதலை நிறுத்த வேண்டும் என  உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐநாவில் உறுப்பு நாடுகள் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன. இருந்தும் இந்த தாக்குதல்கள் ஓய்ந்தபாடில்லை.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்.! ரஷ்யாவின் தீர்மானத்தை நிராகரித்தது ஐ.நா.!

ஏற்கனவே, இஸ்ரேலை சேர்ந்த 199 பேரை பணயக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்து இருந்தது. மேலும், அந்த பணயக்கைதிகளில் வயதானவர்கள், குழந்தைகள், வெளிநாட்டினரும் உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ள பணயக்கைதிகள் பற்றி ஈரான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நாசர் கனானி கூறுகையில், ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்ட பொதுமக்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அந்த அமைப்பு தயாராக இருக்கிறது. ஆனால் அவர்கள் கூறுவது என்னவென்றால், காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் வான்வெளி தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினர் கூறியதாக ஈரான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் கூறுகையில், தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்துவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என ஹமாஸ் கூறியதாகவும் அவர் கூறினார்.

இந்த போர் சமயத்தில் அமெரிக்கர்கள் காசாவுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது, மேலும் இஸ்ரேலுக்கு பயணம் செய்வதையும் அமெரிக்கர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கர்களைக அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

9 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

10 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

10 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

11 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

11 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

12 hours ago