Ibrahim Abu-Maghsib [File Image]
இஸ்ரேல் மீது காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் 7ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுக்க ஹமாஸ் அமைப்பினர் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் இரண்டுகட்டமாக வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில், மூன்றாவது கட்டமாக தரை வழி தாக்குதலைத் தொடங்கியது.
இப்போது இஸ்ரேல் ராணுவத்தின் நஹாஸ் காலாட்படை பிரிவினர் காஸாவில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த இரு பிரிவினருக்கும் இடையே நடக்கும் போரினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் பல உலக நாடுகள், இரண்டு தரப்பினரிடமும் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இருந்தும் இரு நாடுகளிடையே போரை நிறுத்துவதற்கான அறிகுறிகள் இல்லை. இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் கண்காணிப்பு நிலைகள், ஏவுகணை ஏவுதளங்கள் உட்பட 450-க்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகளைத் தாக்கியது. தொடந்து, பள்ளி வளாகங்களில் மறைந்து இருந்த ஹமாஸ் தளவாடங்களை கண்டறிந்து வான்வெளி தாக்குதல் நடத்தியது.
ஹமாஸ் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், மத்திய முகாம்கள் படைப்பிரிவில் உள்ள ஹமாஸின் ஆண்டி டேங்க் ஏவுகணைப் பிரிவின் தலைவர் இப்ராஹிம் அபு-மக்சிப், ஐஎஸ்ஏ மற்றும் ஐடிஎஃப் உளவுத்துறை நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF) தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, இஸ்ரேலிய பொதுமக்களைத் தாக்கவும், கடத்தவும் மற்றும் கொலை செய்யவும் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளை அனுப்புவதற்கு உதவியாக இருந்த ஹமாஸின் டெய்ர் அல்-பலாஹ் பட்டாலியனின் தளபதி வேல் அசெபா கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…