Categories: உலகம்

உக்ரைன் முதல் இஸ்ரேல் வரையில்.. இந்தியா – அமெரிக்கா பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்…

Published by
மணிகண்டன்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையானது தலைநகர் டெல்லியில் கடத்த நவம்பர் 10ஆம் தேதி துவங்கியது. 2+2 பேச்சுவார்த்தை என்பது இரு நாடுகளை சேர்ந்த இரு துறை அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டமாகும்.

இதில், இந்தியா சார்பில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்ந்தா சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். அமெரிக்கா சார்பில் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ‘ இந்த ஆலோசனை கூட்டமானது,  வெளிப்படையான கருத்துக்களை உள்ளடக்கிய  இரு நாடுகளுக்கு இடையேயான சர்வதேச விதிகளை மேம்படுத்துவதற்கான தீர்மானத்தை இந்த கூட்டறிக்கை வெளிப்படுத்துகிறது.

இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் QUAD வழிமுறைகள் மூலம் இந்தோ-பசிபிக் கடல்வழி வர்த்தகங்கள், உலகளாவிய பிரச்சினைகளான ரஷ்யா-  உக்ரைன் விவகாரம், மற்றும் மத்திய கிழக்கில் உள்ள (இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்) துயரமான போர் மற்றும் அதன் விளைவுகள பற்றியும் இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.

பயங்கரவாதத்திற்கு எதிராக இஸ்ரேலுடன் தங்கள் நிலைப்பாட்டை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியது. ஆனால் இந்த போரில் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதை குறைக்க முயல வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா-இந்தியா தொழில்துறை ஒத்துழைப்பு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பதிற்கான விரிவாக்கப்பட்ட ஒத்துழைப்பு போன்றவை குறித்தும் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

நம்மைத் துன்புறுத்தும், நம்மைப் பிரிக்கும் தொழில்நுட்பத்துக்குப் பதிலாக, நம்மை இணைக்கும், நம்மைப் பாதுகாக்கும் தொழில்நுட்பத்துக்குப் பதிலாகவும், உலக நன்மைக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கே இரு நாட்டு அறிவியலையும், தொழில்நுட்பத்தையும்,  விரிவுபடுத்துவதற்கான வழிகளைப் பற்றி இரு நாடுகள் விவாதித்தன.

கடந்த ஆண்டில், நாங்கள் (அமெரிக்கா) பல துறைகளில் முன்னேற்றங்களை கண்டுள்ளோம். அமெரிக்க தனியார் துறை நிறுவனங்களால் இந்திய தொழில்நுட்பத்தில் பல பெரிய முதலீடுகள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையேயான உரையாடல்கள், விண்வெளி, பாதுகாப்பு இணை உற்பத்தி மற்றும் கிரக பாதுகாப்பு போன்றவற்றைச் சுற்றி விரிவடைகின்றன என்றும் அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நீலகிரியில் வெளுத்து ஊத்தும் கனமழை! இந்த இடங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

சென்னை : நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக உதகை, குந்தா, கூடலூர், மற்றும்…

12 minutes ago

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…

12 hours ago

”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

12 hours ago

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…

12 hours ago

சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.!

சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…

13 hours ago

“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…

14 hours ago