Categories: உலகம்

ரயில் விபத்து செய்தி… மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.! ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இரங்கல்.!

Published by
மணிகண்டன்

ஒடிசா ரயில் விபத்து குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா.

ஒடிசா மாநிலத்தில் பாலசோர் மாவட்டத்தில் மேற்றிரவு நேர்ந்த ரயில் விபத்தில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 900க்கும் அதிகமானோருக்கு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உள்நாட்டு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஒடிசா ரயில் விபத்து குறித்து ஜப்பான் பிரதமரும் தனது இரங்கலை தெரிவித்து உள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்தில் விலைமதிப்பற்ற பல உயிர்கள் பறிபோன செய்தி மற்றும் காயம் அடைந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஜப்பான் அரசு மற்றும் மக்கள் சார்பாக, உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

55 minutes ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

1 hour ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

2 hours ago

ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!

ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…

3 hours ago

விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் – ரெய்னா.!

டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…

3 hours ago

“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?

ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…

4 hours ago