Jappan PM Fumio Kishida [Image source : Getty Images]
ஒடிசா ரயில் விபத்து குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா.
ஒடிசா மாநிலத்தில் பாலசோர் மாவட்டத்தில் மேற்றிரவு நேர்ந்த ரயில் விபத்தில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 900க்கும் அதிகமானோருக்கு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உள்நாட்டு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஒடிசா ரயில் விபத்து குறித்து ஜப்பான் பிரதமரும் தனது இரங்கலை தெரிவித்து உள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்தில் விலைமதிப்பற்ற பல உயிர்கள் பறிபோன செய்தி மற்றும் காயம் அடைந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஜப்பான் அரசு மற்றும் மக்கள் சார்பாக, உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…