Categories: உலகம்

#KenyaRoadAccident: கட்டுப்பாட்டை இழந்த லாரி…கென்யா சாலை விபத்தில் 48 பேர் பலி!

Published by
பாலா கலியமூர்த்தி

கென்யாவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி பல வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 48 பேர் பலியாகினர்.

மேற்கு கென்யாவில் லண்டியானி சந்திப்பு என அழைக்கப்படும் பரபரப்பான பகுதியில் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள் மற்றும் சாலையோர நின்றவர்கள் மீது மோதியதில் சுமார் 48 பேர் உயிரிழந்ந்துள்ளனர் அப்பகுதி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கெரிச்சோவை நோக்கி சென்றுகொண்டிருந்த அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மற்றும் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது வேகமாக மோதி விபத்துக்கு நேரிட்டது.

அதாவது, கட்டுப்பாட்டை இழந்து லாரி, 8 வாகனங்கள், பல மோட்டார் சைக்கிள்கள், சாலையோரம் இருந்தவர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பிற வணிகங்களில் இருந்தவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு வாகனங்கள் சேதமடைந்தன. இந்த கோர விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த கோர விபத்தில் சிக்கிய 30 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் பலி மேலும் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகளைத் தொடர்ந்து விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் கிப்சும்பா முர்கோமென் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

9 minutes ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

25 minutes ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

51 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

1 hour ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

2 hours ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

2 hours ago