Charles III [Image source : AP]
இங்கிலாந்து மன்னர் பிறந்தநாள் விழாவில் 40க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் கௌரவிக்கப்பட உள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் 3ஆம் சார்லஸ் தனது 74வது பிறந்தநாளை வரும் நவம்பர் 14இல் கொண்டாட உள்ளார். இவர் பிறந்தநாளை முன்னிட்டு, இங்கிலாந்து நாட்டில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுவர்.
அந்த வகையில், இதுவரை பரிந்துரைக்கப்பட்ட குழு பட்டியல் விவரம் வெளியாகியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு லண்டனில் இங்கிலாந்து அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பட்டியலில் மொத்தம் 1,171 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 52 சதவீதத்தினர் தங்கள் வேலை செய்யும் துறைகளில் சிறந்த பணியை வெளிப்படுத்தியுள்ளனர். 11 சதவீதத்தினர் சிறுபான்மை இனத்தை சேந்தர்வர்கள்.
இந்த பட்டியலில் 40 க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி மருத்துவர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய வம்சாவளி பட்டியலில், டாக்டர் பர்விந்தர் கவுர் அலே, பேராசிரியர் புரோகார் தாஸ்குப்தா, அனுஜ் சண்டே, ஹினா சோலங்கி, பல்வீர் மோகன் பல்லா, ரேகேஷ் சவுகான், கைலாஷ் மல்ஹோத்ரா, பல்பீர் தில்லான் மற்றும் குல்தீப் சிங் தில்லான் ஆகியோர் உள்ளனர். இதற்கான பட்டியலை இங்கிலாந்து அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…