இன்று 2024 ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே ஜப்பானில் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் 5.5 என்ற ரிக்டர் அளவு முதல் 7.6 ரிக்டர் அளவு வரை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானின் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை விடுப்பு! இஷிகாவா, நைகட்டா, டொயாமா உள்ளிட்ட கடற்கரையோர நகர மக்கள் சுனாமி எச்சரிக்கை காரணமாக அங்கு வசித்து வந்த மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டனர். […]
ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று பிற்பகல் 12 மணிக்கு மேல் 5.5 ரிக்டர் அளவு முதல் 7.6 ரிக்டர் அளவு வரை பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து, கடற்கரையோர நகரங்களுக்கு மிக அதிக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நகரங்களில் நிலநடுக்கம் […]
ஜப்பானின் மேற்கு பகுதியில் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹோன்ஷு அருகே அடுத்தடுத்த ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். டோக்கியோ, காண்டோ உள்ளிட்ட நகரங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று ஜப்பானின் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் 5.5 என்ற ரிக்டர் அளவு முதல் 7.6 ரிக்டர் அளவு வரை (21 நிலநடுக்கங்கள்) நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானின் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை […]
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஜப்பானின் மேற்கு பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோன்ஷு அருகே சுமார் 15 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். ஜப்பானின் வட மத்திய பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. 5.5 முதல் 7.4, 7.5 […]
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு, செங்கடல் மற்றும் அரபிக்கடலில் சர்வதேச கப்பல் வழித்தடங்களில் தொடர்ந்து கப்பல் தாக்கப்பட்டு வருகின்றன. நேற்று செங்கடலில் வணிகக்கப்பலின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலை அமெரிக்க கடற்படை முறியடித்து அதன் மூன்று கப்பல்களை மூழ்கடித்து 10 பேரை கொன்றது. அமெரிக்கா கடற்படை இதுகுறித்து கூறுகையில், சிங்கப்பூர் கொடியுடன் வந்த வணிகக் கப்பலை ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்கியதாக அமெரிக்க ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும், அமெரிக்கா உடனடியாக தனது போர்க்கப்பல்களை […]
இந்தியாவில் மக்கள் மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட தயாராகி வருகிறார்கள். இந்தியாவில் புத்தாண்டு விரைவில் தொடங்க உள்ளது, அதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. உலகின் பல நாடுகளில் புத்தாண்டு தொடங்கியுள்ளது. நியூசிலாந்தில் புத்தாண்டு இந்திய நேரப்படி 4.30 மணிக்கு பிறந்தது. இந்நிலையில், நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. சிட்னி நகரில் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி […]
இந்தியாவில் புத்தாண்டு தொடங்க இன்னும் சில மணிநேரங்களே உள்ளன, ஆனால் உலகின் சில பகுதிகளில் புத்தாண்டு ஏற்கனவே தொடங்கிவிட்டது. நியூசிலாந்தில் முதலில் புத்தாண்டு தொடங்கியுள்ளதால், ஆக்லாந்து நகரில் புத்தாண்டை வரவேற்று அங்குள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் புத்தாண்டு பிறந்ததை தொடர்ந்து வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இந்தோனேசியாவின் அருகே வடக்கு சுமத்ராவில் நேற்று (டிசம்பர் 30) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் மக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த நிலையில், இந்த வருடத்தின் கடைசி நாளான இன்று (டிசம்பர் 31) அதிகாலை இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பப்புவாவில் 39 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் […]
ஜனவரி: இந்திய மலியுத்த சம்மேளன தலைவராக பொறுப்பில் இருந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பல இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய மல்யுத்த வீரர்கள் தலைமையில், பல மல்யுத்த வீரர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் நடத்தினர். பிப்ரவரி : […]
இந்த ஆண்டு (2023)-இல் நம்மால் மறக்க முடியாத வகையில் பல நிகழ்வுகள் நடந்து இருக்கிறது. அது என்னவென்ற சிறு குறிப்பை பார்க்கலாம். 1. துருக்கி நிலநடுக்கம் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 17 மாகாணங்களில் 11 மாகாணங்களில் 50,783 பேர் இறந்தனர். 297 பேர் காணவில்லை மற்றும் 107,204 பேர் காயமடைந்துள்ளனர். குறைந்தது 15.73 மில்லியன் மக்களும் 4 மில்லியன் கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 345,000 குடியிருப்புகள் நிலநடுக்கத்தால் அழிந்தது. 2. இந்தியாவை மிஞ்சிய சீனா உலகின் […]
அக்டோபர் மாதம் 6ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்தனர் . ஹமாஸ் அமைப்பினர் நடத்திய முதற்கட்ட தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் பிணை கைதிகளாக பலர் கடத்தி செல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் பதில் தாக்குதலில் இதுவரை 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் காஸாவில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்துவருவதாக […]
இந்தோனேசியாவின் அருகே வடக்கு சுமத்ராவில் இன்று (டிசம்பர் 30) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் மக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இதன் பிறகு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சுனாமி அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. இது மேலும் அதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது வடக்கு சுமத்ராவில் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு தற்போது சுனாமி அச்சுறுத்தல் இல்லை. எனவே, […]
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா உக்ரைனுடனான போரின் போது கடந்த வியாழன் இரவும் வெள்ளிக்கிழமையும் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலைத் நடத்தியுள்ளது. ரஷ்யா, உக்ரன் மீது சுமார் 122 ஏவுகணைகள் மற்றும் 36 ட்ரோன்களை ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 18 மணி நேர தாக்குதலின் போது குறைந்தது 18 பேர் பலியாகியதாகவும், 86 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரைன் விமானப்படை 87 ஏவுகணைகளையும் 27 ஷாஹெட் வகை ட்ரோன்களையும் ஒரே […]
கடந்த மார்ச் 8, 2014 அன்று 227 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் MH370 எனும் விமானம் தெற்கு மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து சீனாவின் பெய்ஜிங் புறப்பட்டது . ஆனால் குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் முன்னரே நடு வான்வழியில் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய பல்வேறு அமைப்பினரின் தீவிர தேடுதல் நடவடிக்கைகளுக்கு பிறகும் விமானம் காணாமல் போன இடம் பயணித்தவர்கள் பற்றிய விவரம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. பேரக்குழந்தைகளை பார்க்க ஆந்திராவில் […]
ஆந்திர மாநிலம் அமலாபுரம் நகரை சேர்ந்தவர்கள் 64 வயதான நாகேஸ்வரராவ் மற்றும் 60 வயதான சீதாமஹாலக்ஷ்மி ஆகியோரது மகள் நவீனா மற்றும் அவரது கணவர் லோகேஷ் ஆகியோர் எல்1 விசாவில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு நிஷிதா மற்றும் ஹிருத்திக் என இரு குழந்தைகள் இருந்துள்ளனர். லைபீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 40 பேர் பலி.! தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளை பார்ப்பதற்கு நாகேஸ்வரராவ் மற்றும் சீதாமஹாலக்ஷ்மி ஆகியோர் ஆந்திராவில் இருந்து அமெரிக்கா […]
ஜப்பானின் கடற்கரைக்கு அருகே இன்று 6.5 மற்றும் 5.0 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) படி, பிற்பகல் 2:45 மணிக்கு 6.5 ரிக்டர் அளவிலான முதல் நிலநடுக்கம் தாக்கியதாகவும் அதைத் தொடர்ந்து மாலை 3:07 மணிக்கு 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது. யுஎஸ்ஜிஎஸ் படி, இரண்டு நிலநடுக்கங்களுலில் ஒன்று 23.8 கிமீ ஆழத்தில் தாக்கியது, இரண்டாவது நிலநடுக்கம் அதே பகுதியைச் சுற்றி 40 கிமீ […]
மத்திய லைபீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்ததில் குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாக மேற்கு ஆபிரிக்க நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி பிரான்சிஸ் கேட்டேநேற்று (புதன்கிழமை) தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை தாமதமாக பெட்ரோல் ஏற்ற கொண்டு வந்த டிரக் திடீரென விபத்துக்குள்ளானது, பின்னர் வெடித்து சிதறியதில் சம்பவ இடத்தில் திரண்டிருந்த பலர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர். இன்னும் பலர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் என்றும், இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இஸ்ரேல் – […]
அக்டோபர் மாதம் 6ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்தனர் . ஹமாஸ் அமைப்பினர் நடத்திய முதற்கட்ட தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் பிணை கைதிகளாக பலர் கடத்தி செல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் பதில் தாக்குதலில் இதுவரை 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவில் இரு சமூகத்தினருக்கு இடையே நடந்த மோதலில் 16 பேர் […]
ஆஸ்கார் விருது பெற்ற ‘பாராசைட்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக புகழ்பெற்ற தென் கொரிய நடிகர் லீ சன்-கியூன், தென்கொரியாவின் சியோல் நகரில் உள்ள பூங்கா அருகே காரில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். தற்போது, அவரது மர்ம மரணம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தென் கொரியாவில் கடுமையான போதைப்பொருள் சட்டங்கள் உள்ளன, அந்நாட்டு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தினால், ஆறு […]
நைஜீரியாவில் பிளாட்டியூ மாநிலம் உள்ளது. அங்குள்ள கிராமம் ஒன்றில் இருவேறு கும்பல்களிடையே நடந்த மோதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 300-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கான காரணம் என்னும் தெளிவாக தெரியவில்லை என ராணுவ கேப்டன் ஓயா ஜேம்ஸ் தெரிவித்தார். இப்பகுதியில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் ,விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டு அடிக்கடி சண்டைகள் நடைபெறும். கடந்த மே மாதம் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 100 […]