Categories: உலகம்

இலங்கையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்.! தமிழ் கட்சிகளுக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு

Published by
மணிகண்டன்

இலங்கையில் நாளை அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ் கட்சிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.

1948 சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் சிங்களத்தவர்களின் ஆதிக்கம் அதிகரிக்க துவங்கி, அதன் பின்னர் சிங்கள மொழி ஆட்சிமொழி என அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கு உள்நாட்டு போர் ஏற்பாடும் அபாயம் வரை சென்றது. இதனை தடுக்க, அப்போது 13வது சட்ட திருத்தம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. 1987ஆம் ஆண்டு, ஜூலை 29ஆம் தேதி மறைந்த அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் அப்போதைய இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோர் இடையே கையெழுத்திடப்பட்டது.

இந்த சட்டத்திருத்ததின் கீழ், அரசியல், அரசு பணிகள், அதிகர்ப்பங்கீடு என தமிழர்களுக்கு உரிமை கோரும் வகையில் 13வது சட்டத்திருத்தம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த சட்டத்திருத்தம் தற்போது அவர் அதிகாரபூர்வமாக அமல்படுத்தப்படவில்லை. இதனால் தான் இலங்கையில் உள்நாட்டு போர் அதிகரிக்க துவங்கியது.

தற்போது 13வது சட்டத்திருத்தம் அமல்படுத்தபடவேண்டும் என்ற கோரிக்கை குரல்கள் எழுந்து வருகிறது. ஏற்கனவே, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் இலங்கைக்கு சென்ற போது கூட 13வது திருத்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஜூலை 20ஆம் தேதி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது 13வது சட்டத்திருத்தம் பற்றிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறித்து.

இதனை முன்னிட்டு தற்போது இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ் கட்சி அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  இந்த கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்மக்கள் முன்னணி புறக்கணிக்கிறது. அவர்கள் 13வது சட்ட திருத்தம் மூலம் அதிகார பகிர்வு மட்டும் தமிழாக்களுக்கு போதாது. மேலும் சில விதிமுறைகள் வேண்டும் என கோரினார். விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

5 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

5 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

5 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

6 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

7 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

7 hours ago