PM Modi and Russia President Putin [Images source : MINT_PRINT]
ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்து ஆலோசித்து உள்ளார். அப்போது ரஷ்யா உள்நாட்டு போர், உக்ரைன் நாட்டுடனான போர் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இருநாட்டு உறவுகள் குறித்தும், சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் கலந்து ஆலோசித்ததாக வெளியுறவு துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில், இரு நாட்டு தரப்பும் தங்களுக்குள் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்கி, இரு நாட்டு முன்னேற்றம் குறித்தும் தலைவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, இரு நாட்டு நலன் மட்டுமல்லாது உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் புதின் மற்றும் பிரதமர் மோடி விவாதித்தனர்.
இந்தியா – ரஷ்யா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொள்வதற்கும் இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக ஒப்பு கொண்டனர். இந்த உரையாடலில் ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வு காண ரஷ்ய அதிபர் புடினிடம் மோடி வலியுறுத்தினார் என்றும், வாக்னர் உள்நாட்டு போர் குறித்தும் வெளியுறவு துறை வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…