FranceRiots [Image Source : Reuters]
பிரான்ஸில் 17 வயது இளைஞன் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் 667 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் புறநகர் பகுதியான நான்டெர்ரேயில், கடந்த 27ம் தேதி நடந்த போக்குவரத்து சோதனையின் போது 17 வயது இளைஞன் ஒருவரை போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனையடுத்து, பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கானோர், கொல்லப்பட்ட இளைஞனுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று நாட்களாக போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், நேற்று இரவு போராட்டக்காரர்கள் சாலையில் இருந்த கார்கள் மற்றும் குப்பைத் தொட்டிகளுக்கு தீ வைத்ததோடு, காவல்துறை அதிகாரிகள் மீது பட்டாசுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தாக்குதலில் 294 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். மேலும், பிரான்ஸ் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 667 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…