Categories: உலகம்

அணுமின் நிலையத்திற்கு குறி வைத்த ரஷ்யா – உக்ரைன்.! வெளியான அதிர்ச்சி தகவல்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள Zaporizhzhia அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த சதி செய்வதாக இரு நாடுகளும் குற்றசாட்டு.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், இன்னமும் போர் நீடித்து தான் வருகிறது. இந்த சமயத்தில், உக்ரைனில் போரிட ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறக்கப்ட்ட வாக்னர் படை, அந்த நாட்டுக்கு எதிராக திரும்பி போர் தொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதன்பின், பேச்சுவார்த்தையின் மூலம் வாக்னர் படை தங்களது தாக்குதலை கைவிட்டது.

இந்த நிலையில், ரஷ்யாவும், உக்ரைனும் ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பரபரப்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகள் கலந்த வெடிமருந்துகளை வீச உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா குற்றசாட்டியுள்ளது.  அதே நேரத்தில் ரஷ்ய துருப்புக்கள், அணுமின் நிலையத்தில் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் குற்றசாட்டியுள்ளது.

பிப்ரவரி 2022இல் உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு, தென்கிழக்கு உக்ரைனில் உள்ள அணுமின் நிலையம் ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ளது. உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, ஆறு உலைகளைக் கொண்ட ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையத்தை ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றின. தற்போது இரு நாடுகளும் அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

5 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

6 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

6 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

7 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

7 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

9 hours ago