Wagner force Leader Yevgeny Prigozhin - Russia Putin [File Image]
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு துணையாக போரிட்ட முக்கியமான படை வாக்னர் படை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாக்னர் படை தலைவர் ப்ரிகோஜின் திடீரென ரஷ்யாவுக்கு எதிராக தனது படையினை செயல்படுத்த துவங்கினார். இதனால் ரஷ்யாவில் உள்நாட்டு போர் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த புதன் கிழமை நடந்த விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 7 பயணிகள் 3 விமானிகள் என 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. உயிரிழந்தவர்களில் ஒருவர் வாக்னர் படை தலைவர் ப்ரிகோஜின் எனவும் ரஷ்ய ஊடகங்கள் தகவல் தெரிவித்தன. இவரது மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கல்/கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாக்னர் படை தலைவர் ப்ரிகோஜின் மறைவு குறித்து ரஷ்ய அதிபர் புதின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். கிரெம்ளினில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி சந்திப்பின் போது புதின் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.
விமான விபத்தை பொறுத்தவரை, முதலில் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது எப்போதும் ஒரு சோகமான நிகழ்வுதான் என தெரிவித்தார்.
ப்ரிகோஜின் ஒரு திறமையான நபர், திறமையான தொழிலதிபர், அவர் நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும், குறிப்பாக ஆப்பிரிக்காவிலும் பணிபுரிந்தார். அவர் எண்ணெய், எரிவாயு, விலைமதிப்பற்ற உலோகங்கள் கொண்ட நிறுவனங்கள் என பல்வேறு பகுதிகளில் பணியாற்றியுள்ளார் என குறிப்பிட்டார்.
வாக்னர் படை தலைவர் ப்ரிகோஜின் ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட்ட நேரத்தில் புடின் கூறுகையில், இது ஒரு துரோக நிகழ்வு, ப்ரிகோஜின் முதுகில் குத்திவிட்டார் என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று…
ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்…
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…