Pennsylvania shooting [Image source: file image ]
கிழக்கு பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு பென்சில்வேனியாவின் லெபனான் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 33 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் 19 வயதான ஜோசுவா லுகோ-பெரெஸ், 8 வயதான ஜீசஸ் பெரெஸ்-சலோம் மற்றும் 9 வயதான செபாஸ்டியன் பெரெஸ்-சலோம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து லெபனான் காவல் துறையின் தலைமை காவலர் ஃபிஷர் கூறுகையில், இந்த விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் ஒருவர் குறிவைக்கப்பட்டதாகத் தெரிகிறது, பாதிக்கப்பட்ட மற்ற மூன்று பேர் இதில் தொடர்பில்லாதவர்கள் என்று தெரிவித்தார். இதற்கிடையில், ஒரு வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…