Categories: உலகம்

அரிசோனாவின் யூமா நகரில் துப்பாக்கிச் சூடு..! குறைந்தது 7 பேர் காயம்..!

Published by
செந்தில்குமார்

அரிசோனாவில் யூமா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 7 பேர் காயமடைந்துள்ளனர்.

அரிசோனாவில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லைக்கு அருகே உள்ள யூமா நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. யூமா நகரில் உள்ள போலீசாருக்கு இரவு 11 மணிக்கு முன்னதாக ஒரு துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடப்பதாக தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

இதனையடுத்து, அழைப்பு வந்த முகவரிக்கு போலீசார் வந்து பார்த்தபோது அங்கு துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சிலர் இருப்பதைக் கண்டுள்ளனர். பின்னர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் குறைந்தது ஏழு பேரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் எத்தனை பேர் சுடப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மேலும், சமீபத்தில் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்த கிட்டத்தட்ட 300 புலம்பெயர்ந்தோரை விடுவிக்க எல்லை ரோந்து திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க நகரத்தின் மேயர் டக்ளஸ் நிக்கோல்ஸ் குடியிருப்பாளர்களுக்கு அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 minutes ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

1 hour ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

3 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

4 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

5 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

20 hours ago