உலகம்

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம் – மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு..!

Published by
லீனா

கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் காஸாவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பலர் அகதிகளாக காஸா பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கத்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டது.

சீனாவில் அடுத்த கொரோனா பாதிப்பா.? குழந்தைகளுக்கு வேகமாக பரவும் சுவாச நோய்.!

மேலும் இந்த போர் நிறுத்தத்தின் போது, இருதரப்பிலும் பிணைக்கைதிகளை விடுவிக்க சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, இருதரப்பினரும் பிணைக்கைதிகளை விடுவித்தனர். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட இந்த 4 நாட்களும் காஸாவில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், கத்தார் மற்றும் எகிப்து தரப்பில், மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் நீட்டிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், காசா மற்றும் இஸ்ரேல் மக்களிடையே நிரந்தரமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்படாதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

10 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

11 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

12 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

12 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

13 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

13 hours ago