Categories: உலகம்

அமெரிக்காவில் பயங்கரம்! 3 கறுப்பினத்தவர்கள் சுட்டுக்கொலை!

Published by
பால முருகன்

அமெரிக்காவின் புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள டாலர் ஜெனரல் ஸ்டோரில் சனிக்கிழமை பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். புளோரிடாவின் ஜாக்சன் வெலி பகுதியில் கறுப்பினத்தவர்கள் தான் அதிகம் வசித்து வருகிறார்கள். வழக்கம் போல அனைவரும் அந்த பகுதியில் தங்களுடைய வேலைகளை செய்துகொண்டிருந்த நிலையில், திடீரென அந்த பகுதியில் நுழைந்த வெள்ளை இனத்தவர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்தார்.

பிறகு திடீரென அவர் தனது கைகளில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து கறுப்பினத்தவர்களை சுட தொடங்கினார். துப்பாக்கி சத்தம் கேட்டதை தொடர்ந்து கடையில் இருந்த மற்றவர்களும் பதட்டத்தில் கூச்சலிட்டனர். இந்த மோசமான துப்பாக்கிசூட்டில் தாக்குதலில்  3 கறுப்பினத்தவர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்கள்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவலை தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியவரை கைது செய்ய முயன்றார்கள். இதனை கவனித்த வெள்ளை இனத்தவர் தனது துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

பின் காவல்துறையினர் அவருடைய துப்பாக்கியை பறிமுதல் செய்து பார்த்ததில் அதில் எழுதப்பட்டிருந்த இனவெறி வசனங்களை வைத்து இது இனவெறி காரணமாக நடந்த தாக்குதல் என கண்டுபிடித்தனர். அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிசூட்டில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

19 minutes ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

55 minutes ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

1 hour ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

2 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

3 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago