Categories: உலகம்

அமெரிக்காவில் பயங்கரம்! 3 கறுப்பினத்தவர்கள் சுட்டுக்கொலை!

Published by
பால முருகன்

அமெரிக்காவின் புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள டாலர் ஜெனரல் ஸ்டோரில் சனிக்கிழமை பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். புளோரிடாவின் ஜாக்சன் வெலி பகுதியில் கறுப்பினத்தவர்கள் தான் அதிகம் வசித்து வருகிறார்கள். வழக்கம் போல அனைவரும் அந்த பகுதியில் தங்களுடைய வேலைகளை செய்துகொண்டிருந்த நிலையில், திடீரென அந்த பகுதியில் நுழைந்த வெள்ளை இனத்தவர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்தார்.

பிறகு திடீரென அவர் தனது கைகளில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து கறுப்பினத்தவர்களை சுட தொடங்கினார். துப்பாக்கி சத்தம் கேட்டதை தொடர்ந்து கடையில் இருந்த மற்றவர்களும் பதட்டத்தில் கூச்சலிட்டனர். இந்த மோசமான துப்பாக்கிசூட்டில் தாக்குதலில்  3 கறுப்பினத்தவர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்கள்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவலை தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியவரை கைது செய்ய முயன்றார்கள். இதனை கவனித்த வெள்ளை இனத்தவர் தனது துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

பின் காவல்துறையினர் அவருடைய துப்பாக்கியை பறிமுதல் செய்து பார்த்ததில் அதில் எழுதப்பட்டிருந்த இனவெறி வசனங்களை வைத்து இது இனவெறி காரணமாக நடந்த தாக்குதல் என கண்டுபிடித்தனர். அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிசூட்டில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

9 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

9 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

10 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

11 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

13 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

14 hours ago