Russia prez putin[Image-ani]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை(SCO) நடத்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் ரஷ்ய அதிபர் புதின்.
இன்று நடைபெற்ற 23வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டிற்கு பிரதமர் மோடி காணொளி மூலமாக தலைமையேற்று நடத்தினார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகம் சந்திக்கும் பிரச்சனைகளில் உணவு, எரிபொருள் மற்றும் உரம் போன்றவைகளின் தேவைகள் தான் அதிகம் உள்ளது. மேலும் பிரதமர் மோடி, இந்த மாநாட்டில் இந்தியாவின் AI சார்ந்த மொழி இயங்குதளமான ‘பாஷிணி’ யை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த SCO மாநாட்டிற்காக, ரஷ்ய அதிபர் புதின் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார். இதுகுறித்து கூறிய புதின், உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி, மற்றும் பயங்கரவாதம், தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தலை தடுப்பதுதான் எஸ்சிஓவின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…