Categories: உலகம்

உணவு தேடி வயலுக்கு வந்த ஒட்டகம்! காலை வெட்டிய கொடூரம்…5 பேர் கைது!

Published by
பால முருகன்

பாகிஸ்தான் : கராச்சியில் சிந்து மாகாணத்தில் உணவு தேடி வயலில் அத்துமீறி நுழைந்த ஒட்டகத்தின் காலை வெட்டிய  கொடூரமான சம்பவத்தில் வயலின் உரிமையாளர் மற்றும் அவரது ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது.  கடந்த வார இறுதியில் சங்கர் மாவட்டத்தின் முண்ட் ஜம்ராவ் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சங்கர் மாவட்டத்தின் முண்ட் ஜம்ராவ் கிராமத்தில் உள்ள ஒரு வயலுக்கு பசியோடு ஒட்டகம் ஒன்று வந்து அங்கு இருந்த உணவுகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த வயலில் உரிமையாளர் ஆத்திரம் அடைந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒட்டகத்தின் இடது காலை அரிவாளால் பரிதாபம் கூட இல்லாமல் கொடுரமாக வெட்டினார்கள்.

அத்துடன் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து உரிமையாளர் ருஸ்தும் ஷார் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி  வந்த நிலையில், பலரும் கண்டனங்களை தெரிவித்து கண்டிப்பாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி வந்தனர்.

ஒட்டகத்தின் உரிமையாளரான விவசாயி சோமர் பெஹன் காவல்துறையில் புகார் செய்யவில்லை இருப்பினும் வீடியோ வைரலாக பரவிய நிலையில், காவல்துறையினர் இது பற்றி விசாரணை செய்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தனர். வயலின் உரிமையாளர் அவரது ஊழியர்கள்  உட்பட 5 பேர் கைது செய்து அவர்களிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  ஒட்டகத்தின் கால் குணமாகி வருவதாகவும், அதன் சிகிச்சையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்க செவ்வாய்கிழமை எக்ஸ்ரே எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

19 minutes ago

“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…

21 minutes ago

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…

2 hours ago

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…

2 hours ago

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…

2 hours ago

என்ன நடந்தாலும் கூலா இருப்பாரு.., விஜய் பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்த மமிதா பைஜு.!

சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…

3 hours ago