Categories: உலகம்

நினைவை இழந்த ஓட்டுநர்…சூப்பர் ‘ஹீரோவாக’ மாறி 66 உயிர்களை காப்பாற்றிய சிறுவன்…குவியும் பாராட்டுக்கள்.!!

Published by
பால முருகன்

ஓட்டுனர் மயங்கி விழுந்ததால், 7-ஆம்  வகுப்பு மாணவன் ஓடும் பேருந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து 66 பேரின் உயிரை காப்பாற்றிஉள்ளார். 

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இருக்கும் கார்ட்டர் நடுநிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஓட்டுநர் ஏப்ரல் 26 புதன்கிழமை பேருந்தை இயக்கும் போது “மயக்கம் அடைந்து சுயநினைவை இழந்தார்”. அப்போது பேருந்தில் இருந்த 7ம் வகுப்பு மாணவன் டில்லன் என்பவர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தினார்.

அந்த மாணவன் பேருந்தை நிறுத்தி, 66 பேரின் உயிரை காப்பாற்றிஉள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் டில்லன்னை சூப்பர் ஹீரோ என பாராட்டி தள்ளி வருகிறார்கள்.

பேருந்து நின்ற பிறகு, அவசர உதவி எண்ணுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பிறகு பேருந்து ஓட்டுனரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின், டில்லனுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா ஒன்றும் நடத்தப்பட்டது.

Published by
பால முருகன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

1 hour ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago