Categories: உலகம்

உக்ரைன் நாட்டில் நீர் தேக்க அணை தகர்ப்பு.! இரு நாட்டு ராணுவமும் ஒருவர் மீது ஒருவர் புகார்.!

Published by
மணிகண்டன்

உக்ரைன் நாட்டில் டினிப்ரோ ஆற்றின் மீதுள்ள ககோவ்கா அணை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்தை தண்டிவிட்டது. இன்னும் அவ்வப்போது இரு நட்டு ராணுவமும் தங்கள் தாக்குதல்களை எதிர் நாட்டின் மீது நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பாமல் இருக்கிறது.

இந்நிலையில், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள நீர் தேக்க அணையானது அண்மையில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இரு நாட்டு ராணுவமும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தெற்கு உக்ரைன் பகுதியில் டினிப்ரோ ஆற்றின் மீது ககோவ்கா அணையானது கடந்த 1956இல் கட்டப்பட்டது. இந்த அணை, 30 மீட்டர் உயரமும், 3.2 கிமீ நீளமும் கொண்டது. ககோவ்கா நீர்மின் நிலையத்தின் ஒரு பகுதியாக இந்த அணை கட்டப்பட்டது. இது 18 கிமீ நீளத்திற்கு நீர்த்தேக்கத்தைக் கொண்டுள்ளது.

இந்த அணையானது 2014இல் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்திற்கும் மற்றும் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கும் தண்ணீரை வழங்கி வருகிறது.

தற்போது ரஷிய கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த யானைமீது நடத்தப்பட்டு இருக்கும் தாக்குதல் காரணமாக அங்கு அதிகளவு நீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெள்ள அபாயத்தில் இருக்கின்றனர். இந்த தாக்குதலை ரஷ்ய ராணுவம் நடத்தியதாக உக்ரைனும், உக்ரைன் ராணுவம் தாக்கியதாக ரஷ்யாவும் புகார் கூறி வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

4 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

4 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

7 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

7 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

8 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

9 hours ago