Categories: உலகம்

உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்த முயற்சி.! போப் ஆண்டவர் – உக்ரைன் அதிபர் ரகசிய சந்திப்பு.?

Published by
மணிகண்டன்

உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த முயற்சிக்கும் விதமாக போப் ஆண்டவர் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து கிட்டதட்ட ஒன்றறை  ஆண்டுகள் ஆக போகின்றன. இன்னும் இரு நாட்டுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு உலக நாடுகள் நேரடியாகவும் , மறைமுகமாகவும் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர சமாதான முயற்சி மேற்கொள்ள ஆரம்பத்தில் இருந்து போப் பிரான்சிஸ் விருப்பம் தெரிவித்து வந்தார். போர் தொடர்பாக இருநாட்டு தலைவர்களை சந்தித்தும் பேச போப் விருப்பம் தெரிவித்து இருந்தார் இருந்தும் இந்த சந்திப்பு நடக்காமல் இருந்தது.

இந்நிலையில், போப் பிரான்சிஸ் மற்றும்  உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சந்திப்பு நிகழ உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்புக்கு உக்ரைன் அதிபர் அனுமதி வழங்கியதாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் போப்பிற்கு தெரிவித்ததாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை, உக்ரைன் அதிபரின் சந்திப்பு விவரங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்பட்டது இல்லை. அது போலவே இந்த சந்திப்பும் பாதுகாப்பு கரங்களுக்காக  வெளியிடப்படவில்லை என தெரிகிறது. போப் பிரான்சிஸை சனிக்கிழமை ஐரோப்பிய நாடான வத்திக்கானில் உக்ரைன் அதிபர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

7 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

7 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago