Vacharaesorn [Image source : Inshorts]
தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் இரண்டாவது மூத்த மகனான வச்சரேசோர்ன் விவச்சரவோங்சே, 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது தாயகம் திரும்பியுள்ளார்.
நியூயார்க்கில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்தில் பணிபுரியும் வச்சரேசோர்ன், தனது தாயகம் வந்தவுடன் அரச குடும்பத்தால் ஆதரிக்கப்படும் ஆதரவற்ற குழந்தை பராமரிப்புக்கான அறக்கட்டளைக்குச் சென்று, அங்குள்ள அனைவரிடமும் நலம் விசாரித்தார்.
பிறகு, 2016ம் ஆண்டு இறந்த தனது தந்தை மற்றும் அவரது தாத்தா மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் ஆகியோரின் உருவப்படங்களுக்கு முன்னால், ஜீன்ஸ் மற்றும் சாதாரண கருப்பு சட்டை அணிந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதன்பிறகு பாங்காக் அறக்கட்டளையில் செய்தியாளர்களிடம் பேசிய வச்சரேசோர்ன், 27 ஆண்டுகளாக தாய் நாட்டைவிட்டு வெளியே இருந்த நான், இப்போது திரும்பி வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன், மீண்டும் வருவது ஒரு கனவு போல இருக்கிறது என்று கூறியுள்ளார்.
வச்சரேசோர்ன் திரும்பியதைக் கண்டு பல தாய்லாந்து மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இதற்கிடையில் மன்னரின் 44 வயதான மூத்தமகள், இளவரசி பஜ்ரகித்தியபா நரேந்திரா தேப்யவதி, கடுமையான இதய நோய் காரணமாக கோமா நிலையில் உள்ளார் என்பது குறிப்பித்தக்கது.
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…