jaisankar Canada [Image-ANI]
கனடாவின் அணிவகுப்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையைக் கொண்டாடியதாகக் கூறப்படும் நிலையில், இது கனடாவுக்கு நல்லதல்ல என ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
கனடாவில் காலிஸ்தானி ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படும், கனடாவின் பிராம்ப்டன் அணிவகுப்பில் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைக் காட்டும் வகையில் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
இந்த வீடியோ ஜூன் 4ஆம் தேதி நடந்த பிராம்ப்டன் அணிவகுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அக்டோபர் 31, 1984 அன்று, அவரது இல்லத்தில் இரு சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். கனடா அணிவகுப்பில் இந்திரா காந்தியின் படுகொலையை கொண்டாடியதாக வெளியான வீடியோவை அடுத்து, இது இந்தியா மற்றும் கனடா உறவுகளுக்கு நல்லதல்ல என்று கூறினார்.
மேலும் பிரிவினைவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும், வன்முறையை ஆதரிப்பவர்களுக்கும் கனடா இடம் அளிப்பது பற்றியும் தெரிவித்த ஜெய்சங்கர் இது இரு நாட்டு உறவுகளுக்கும் நல்லதல்ல மற்றும் கனடாவுக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…