jaisankar Canada [Image-ANI]
கனடாவின் அணிவகுப்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையைக் கொண்டாடியதாகக் கூறப்படும் நிலையில், இது கனடாவுக்கு நல்லதல்ல என ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
கனடாவில் காலிஸ்தானி ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படும், கனடாவின் பிராம்ப்டன் அணிவகுப்பில் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைக் காட்டும் வகையில் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
இந்த வீடியோ ஜூன் 4ஆம் தேதி நடந்த பிராம்ப்டன் அணிவகுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அக்டோபர் 31, 1984 அன்று, அவரது இல்லத்தில் இரு சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். கனடா அணிவகுப்பில் இந்திரா காந்தியின் படுகொலையை கொண்டாடியதாக வெளியான வீடியோவை அடுத்து, இது இந்தியா மற்றும் கனடா உறவுகளுக்கு நல்லதல்ல என்று கூறினார்.
மேலும் பிரிவினைவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும், வன்முறையை ஆதரிப்பவர்களுக்கும் கனடா இடம் அளிப்பது பற்றியும் தெரிவித்த ஜெய்சங்கர் இது இரு நாட்டு உறவுகளுக்கும் நல்லதல்ல மற்றும் கனடாவுக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…