Categories: உலகம்

ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துவோர் தேசத்துரோகிகள்! ரஷ்ய அதிபர் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு உத்தரவு என ரஷ்ய அதிபர் தகவல்.

உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாட்டு ராணுவ படைகளும் தாக்குதல் நடத்தி கொண்டு தான் வருகிறார்கள். இதில், ரஷ்ய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது, உக்ரைன் ராணுவம் பதிலடியும் கொடுத்து வருகிறது. இருப்பினும், உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அந்நாடு மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இது ரஷ்யாவுக்கு பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில் தான், ரஷ்யா வின் தனியார் ராணுவ குழுவான வாக்னர் குழுவின் கூலிப்படை அந்நாட்டுக்கு எதிராக திரும்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா சார்பில் களமிறக்கப்பட்ட வாக்னர் கூலிப் படைகள் சண்டையிட்டு வந்தது. அப்போது, ரஷ்ய ராணுவம், வாக்னர் கூலிப்படைகளைத் தாக்கியதாக குற்றசாட்டு எழுந்தது. இதனால், ரஷ்யாவுக்குள்ளே அரசு ராணுவம், தனியார் ராணுவம் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.

ரஷ்ய ராணுவம் தனது படைகளைத் தாக்கியதாக குற்றம் சாட்டிய ரஷ்ய தனியார் ராணுவ நிறுவனமான வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின், ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார். ரஷ்யாவின் ராணுவத் தலைமையை அழிப்போம். எங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டோம். இனி எங்கள் வழியில் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம். ராணுவத் தலைமை மீதான தனது விமர்சனம் ஒரு சதி அல்ல, நீதிக்கான மாற்று வழி என்றார்.

உக்ரைன் போரை எதிர்க்கொள்ள ரஷ்யா சார்பில், களமிறக்கப்பட்ட வாக்னர் கூலிப் படைகள் மீது ரஷ்ய ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் ரஷ்யாவின் தலைமையத்துவத்தை கவிழ்க்க, படையெடுப்போம் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், தனது படைகள் உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்குள் நுழைந்துவிட்டதாக கூறினார். அதுமட்டுமில்லாமல், ரஷ்யாவுக்குள் புகுந்த வாக்னர் கூலிப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. வாக்னர் கூலிப் படைக்கு தாக்குதலுக்கு எதிராக மாஸ்கோவின் முக்கிய இடத்தில் ரஷ்ய ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் கூறுகையில், ரஷ்யாவில் ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏதுந்துபவர்கள், கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் தேச துரோகிகள்.  தேச துரோகத்தில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்தார்.

ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். மேலும், கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் ஆயுத குழுவினரை கண்டதும் சுட்டு தள்ள ரஷ்ய அதிபர் உத்தரவிட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வாக்னர் ஆயுத குழுவினரை தீவிரவாத அமைப்பு என்று அறிவித்ததாகவும் கூறப்படுகிறது

இதனிடையே, வாக்னர் ஆயுத குழுவினர் கிளர்ச்சியால் மாஸ்கோவில் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யபட்டுள்ளது. கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆயுதக்குழு ரஷ்யாவின் தெற்கு ராணுவ தலைமையகத்தை கைப்பற்றியதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

13 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

13 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

14 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

15 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

15 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

16 hours ago