Categories: உலகம்

ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துவோர் தேசத்துரோகிகள்! ரஷ்ய அதிபர் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு உத்தரவு என ரஷ்ய அதிபர் தகவல்.

உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாட்டு ராணுவ படைகளும் தாக்குதல் நடத்தி கொண்டு தான் வருகிறார்கள். இதில், ரஷ்ய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது, உக்ரைன் ராணுவம் பதிலடியும் கொடுத்து வருகிறது. இருப்பினும், உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அந்நாடு மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இது ரஷ்யாவுக்கு பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில் தான், ரஷ்யா வின் தனியார் ராணுவ குழுவான வாக்னர் குழுவின் கூலிப்படை அந்நாட்டுக்கு எதிராக திரும்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா சார்பில் களமிறக்கப்பட்ட வாக்னர் கூலிப் படைகள் சண்டையிட்டு வந்தது. அப்போது, ரஷ்ய ராணுவம், வாக்னர் கூலிப்படைகளைத் தாக்கியதாக குற்றசாட்டு எழுந்தது. இதனால், ரஷ்யாவுக்குள்ளே அரசு ராணுவம், தனியார் ராணுவம் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.

ரஷ்ய ராணுவம் தனது படைகளைத் தாக்கியதாக குற்றம் சாட்டிய ரஷ்ய தனியார் ராணுவ நிறுவனமான வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின், ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார். ரஷ்யாவின் ராணுவத் தலைமையை அழிப்போம். எங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டோம். இனி எங்கள் வழியில் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம். ராணுவத் தலைமை மீதான தனது விமர்சனம் ஒரு சதி அல்ல, நீதிக்கான மாற்று வழி என்றார்.

உக்ரைன் போரை எதிர்க்கொள்ள ரஷ்யா சார்பில், களமிறக்கப்பட்ட வாக்னர் கூலிப் படைகள் மீது ரஷ்ய ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் ரஷ்யாவின் தலைமையத்துவத்தை கவிழ்க்க, படையெடுப்போம் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், தனது படைகள் உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்குள் நுழைந்துவிட்டதாக கூறினார். அதுமட்டுமில்லாமல், ரஷ்யாவுக்குள் புகுந்த வாக்னர் கூலிப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. வாக்னர் கூலிப் படைக்கு தாக்குதலுக்கு எதிராக மாஸ்கோவின் முக்கிய இடத்தில் ரஷ்ய ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் கூறுகையில், ரஷ்யாவில் ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏதுந்துபவர்கள், கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் தேச துரோகிகள்.  தேச துரோகத்தில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்தார்.

ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். மேலும், கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் ஆயுத குழுவினரை கண்டதும் சுட்டு தள்ள ரஷ்ய அதிபர் உத்தரவிட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வாக்னர் ஆயுத குழுவினரை தீவிரவாத அமைப்பு என்று அறிவித்ததாகவும் கூறப்படுகிறது

இதனிடையே, வாக்னர் ஆயுத குழுவினர் கிளர்ச்சியால் மாஸ்கோவில் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யபட்டுள்ளது. கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆயுதக்குழு ரஷ்யாவின் தெற்கு ராணுவ தலைமையகத்தை கைப்பற்றியதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

36 minutes ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

1 hour ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

2 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

2 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

3 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

3 hours ago