வரலாற்றில் இன்று..! உலகத் தொழிலாளர்களின் சிறப்புமிக்க போராட்டங்களை நினைவுபடுத்தும் மே தினம்..!

Published by
செந்தில்குமார்

உலகம் முழுவதும் தொழிலாளர்களின் ஒற்றுமையை நினைவுபடுத்தும் மே தினம் அனைவராலும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

உலக அளவில் ஆண்டுதோறும், மே 1ம் தேதியான இன்று மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் அனைவராலும் அனுசரிக்கப்படுகிறது. மே தினம், தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கம் செய்த வரலாற்று சிறப்புமிக்க போராட்டங்கள் மற்றும் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை நினைவுகூரும் விதமாகவும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

MayDay [Image Source : Pinterest]

தொழிலாளர்கள் போராட்டம்:

பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆனால், 1884-ல் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.

InternationalWorkersDay [Image Source : The Quint]

அமெரிக்காவின் கறுப்பு தினம் :

அமெரிக்காவில் கடந்த 1887ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். இதையடுத்து, நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த நாள் அமெரிக்காவின் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், பல தியாகிகளின் தியாகமும்தான் இன்று மே தினம் என்னும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

BlackDayinAmerica [Image Source : Greek News Agenda]

இந்தியாவில் தொழிலாளர் தினம்:

இந்தியாவில் 1923-ஆம் ஆண்டில் முதல்முதலாக சென்னை மெரீனா கடற்கரை மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்திய விடுதலைப் போராளியும், சிந்தனைச் சிற்பி என்று அழைக்கப்படும் ம.சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள மெரினா கடற்கரையில், இந்தியாவின் முதல் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து திருவான்மியூர் கூட்டத்தில், சுப்பிரமணிய சிவா மற்றும் எம்.பி.எஸ்.வேலாயுதம் தலைமையில் இந்தியாவின் முதல் மே தினம் கொண்டாடப்பட்டது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

சென்னை : அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத காரணத்துக்காக வசூலிக்கப்பட்டு வந்த அபராதம் இப்பொழுது ரத்து…

2 minutes ago

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…

9 minutes ago

ராமராக ரன்பீர்.., ராவணனாக யாஷ்.!! மிரள வைக்கும் ‘ராமாயணம்’ ஃபர்ஸ்ட் லுக் வீடியோ.!

சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…

13 minutes ago

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…

43 minutes ago

அஜித் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.!

சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…

1 hour ago

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago