Categories: உலகம்

மடகாஸ்கரில் சோகம்! நெரிசலில் சிக்கி 13 பேர் பலி..103 பேர் காயம்!

Published by
பால முருகன்

மடகாஸ்கர் தலைநகர் அன்டனானரிவோவில் உள்ள பரியா மைதானத்தில் இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சுமார் 50,000 பார்வையாளர்கள் கூடியிருந்த பரியா மைதானத்தின் நுழைவாயிலில் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விழாவின் போது தொடக்க விழாவில் கலந்து கொண்ட மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்தார். பிறகு திடீரென கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதத்தால் இந்த அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. கூட்ட நெரிசலின்போது தொலைந்து போன பொருட்களில் குவிந்திருந்த மக்கள் தங்கள் காலணிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்கள்.

இந்த சோகமான சம்பவத்தில் “இதுவரை 7 குழந்தைகள் உட்பட  13 பேர் உயிரிழந்ததாகவும் 107 பேர் காயமடைந்துள்ளனர்” எனவும் எதிர்க்கட்சி எம்பி ஹனித்ரா ரசாபிமானன்சோவா உள்ளூர் வானொலி நிலையத்தில் தெரிவித்தார். காயம் அடைந்த அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

மேலும், கிட்டத்தட்ட சுமார் 28 மில்லியன் மக்கள் வசிக்கும் தீவின் மிகப்பெரிய பரியா ஸ்டேடியம் கடந்த 2019-ஆம் ஆண்டு  இதேபோன்ற ஒரு பேரழிவை சந்தித்தது. நாட்டின் தேசிய விடுமுறையின் போது ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியின் போது குறைந்தது 16 பேர் உயிரிழந்தார்கள் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

1 minute ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

14 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago