Categories: உலகம்

ரஷ்யாவில் தடம் புரண்ட ரயில்.! ஆற்றில் கவிழ்ந்து 70 பேர் காயம் ..!

Published by
அகில் R

ரஷ்யா: வடக்கு ரஷ்யாவின் கோமியின் குடியரசு பகுதியில் பயணிகள் ஏற்றி சென்ற ரயில் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த சம்பவத்தில் சுமார் 70 பயணிகள் காயமடைந்தனர்.

இந்த ரயில் வோர்குடா நகரத்திலிருந்து ஆர்க்டிக் வட்டம் வழியாக நாட்டின் தெற்கில் கருங்கடலில் உள்ள நோவோரோசிஸ்க் துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த வேலையில் கோமி குடியரசில் உள்ள சிறிய நகரமான இன்டா அருகே ரயில் தடம் புரண்டள்ளது.

இந்த விபத்தில் ரயிலின் 9 பெட்டிகள் அருகில் இருந்த கோமி ஆற்றில் கவிழ்ந்துள்ளது. ஆற்றில் கவிழ்ந்த அந்த 9 பெட்டிக்குள் சுமார் 215 பயணிகள் இருந்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 70 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும், காயமடைந்தவர்களில் 7 பேர் தீவிர படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அதிர்ஷ்டவசமாக விபத்தின் போது அருகில் இருந்த கோமி ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்னவென்றால் கோமி பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளது இதனால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அங்குள்ள சில உள்ளூர் ஊடகங்களின்படி செய்திகள் தெரியவந்துள்ளது.

Published by
அகில் R

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

46 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

1 hour ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

1 hour ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

4 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

4 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

4 hours ago