போர்ச்சுகல் : கடந்த ஞாற்றுக்கிழமை அன்று தெற்கு போர்ச்சுகலில் உள்ள பெஜா விமான நிலையத்தில் மாலை 4:05 மணிக்கு நடைபெற்ற ஒரு விமான சாகச நிகழ்ச்சியின் போது 2 சிறிய விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்துக்குள்ளான 2 விமானங்களின் ஒரு விமானி உயிரிழந்துள்ளார் எனவும் மற்றும் ஒரு விமானி காயமடைந்துள்ளார் எனவும் விமானப்படை தெரிவித்துள்ளது.
ஆறு விமானங்களை உள்ளடைக்கிய வான்வழி சாகசத்தின் போது 2 விமானங்கள் ஒன்றை ஒன்று மோதிக்கொண்டு விபத்துக்களாகி இருக்கிறது. இதில் கீழே விழுந்து நொறுங்கிய விமானத்தின் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், காயம் ஏற்பட்டுள்ள அந்த விமானி தீவிர சிகிச்சை பெற்று வருவதாக போர்ச்சுகல் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போர்ச்சுகல் அதிபரான மார்செலோ ரெபெலோ டி சோசா கூறுகையில், “வானில் நடந்த இந்த விமானக் கண்காட்சி ஒரு சிலிர்ப்பான அனுபவத்தை கொடுத்தது மேலும் அதை காணும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் நடந்துள்ள இந்த விபத்தால் தற்போது அது வேதனையாக மாறி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
அதே போல போர்ச்சுகல் பாதுகாப்பு அமைச்சரான நுனோ மெல்லோ, ‘இது ஒரு சோகமான விபத்து என்றும், மோதலுக்கான சரியான காரணத்தை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும்’, செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த விபத்து தொடர்பான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ இணையத்தில் வரைலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…