PMModi Biden Meet [Image-NDTV]
மோடியின் அமெரிக்க வருகையை முன்னிட்டு, அவ்விழாவில் கலந்து கொள்ள டிக்கெட்கள் கேட்டு தன்னை தொந்தரவு அளிப்பதாக பைடன், கூறியுள்ளார்.
நேற்று ஜப்பானில் நடந்த ஜி-7 மாநாட்டின் முக்கிய தலைவர்கள் சந்திப்பில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர், பிரதமர் மோடி பேசும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தங்களுக்கு டிக்கெட்கள் வேண்டுமென்று முக்கிய நபர்களின் கோரிக்கைகள் வந்தவண்ணம் இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனால் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அடுத்தமாதம் பிரதமர் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார், அங்கு வெள்ளை மாளிகையில் பிரதமருக்கு அமெரிக்க தலைவர்கள் அரசு விருந்து அளிக்க உள்ளனர். இது குறித்து பேசிய அதிபர் பைடன், பிரதமர் மோடி பேசும் விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதும் உள்ள அனைவரும் விரும்புகிறார்கள். எனக்கு டிக்கெட் தீர்ந்து விட்டது.
மேலும் நீங்கள் இதன்மூலம் எனக்கு உண்மையான பிரச்சனையை உண்டாக்குகிறீர்கள், இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு நபர்களிடமிருந்து அழைப்புகள், திரைப்பட நட்சத்திரங்கள் முதல் உறவினர்கள் வரை அனைவரும் என்னிடம் டிக்கெட்கள் கேட்டு தொந்தரவு அளிக்கின்றனர், நீங்கள் மிகவும் பிரபலமானவர் என மோடியிடம் அதிபர் பைடன் கூறினார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…