அரசியல்

பிரதமர் மீதான நம்பிக்கையை நாடு இழந்து நிற்கிறது – திருமாவளவன்

Published by
லீனா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வருகின்றனர். நாடாளுமன்ற விதி 267இன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்த நிலையில், இதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

இதனையடுத்து, நாடாளுமன்றத்தில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய விசிக தலைவர் திருமாவளவன்  அவர்கள், பிரதமர் மீதான நம்பிக்கையை நாடு இழந்து நிற்கிறது.

கார்கில் போரில் பங்கேற்ற வீரரின் மனைவியும் மணிப்பூரில் பாதிக்கப்பட்டுள்ளார். சொந்த மண்ணிலேயே மக்கள் அகதிகளாக நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறையில் பெண்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் விவகாரம் நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்து ராஷ்டிரா அமைப்போம், இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் அழித்தொழிப்போம், அதற்காகவே ஆயுதம் ஏந்தியுள்ளோம் என்று பாஜகவினர் வெளிப்படையாகக் கூறுகின்றனர்.

குஜராத், ஹரியானா மட்டுமல்ல, ஜெய்ப்பூர் ரயிலில் காவலர் ஒருவர் இஸ்லாமியர்களைத் தேடிச் சென்று, 3 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளார். இந்தியாவில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அஞ்சி, அஞ்சி வாழும் அவலம் இருக்கிறது. சிறுபான்மையினர் மட்டும் பாதிக்கப்படவில்லை, பெரும்பான்மை இந்து சமூகத்தினரும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமையல் எரிவாயு, தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளன. மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது. SC\ST மற்றும் OBC மக்களுக்கான இடஒதுக்கீடு நிரப்பப்படவில்லை. கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டே இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டது. இவை அனைத்திற்கும் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திரமோடி பதவி விலக வேண்டும்  தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அவிநாசி ரிதன்யா வழக்கு – மாமியாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் !

திருப்பூர் : மாவட்டம் அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா (27) தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது…

28 minutes ago

ஜூலை 27, 28-களில் பிரதமர் மோடி தமிழகம் வருகை!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக…

1 hour ago

300 ரன்களுக்கு இங்கிலாந்தை அவுட் ஆக்குங்க…மேட்ச் உங்களோடது! இந்தியாவுக்கு அட்வைஸ் சொன்ன கும்ப்ளே!

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று…

3 hours ago

குஜராத் பால விபத்து- பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

குஜராத் : மாநிலத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு…

4 hours ago

எல்.எல்.பி. சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (TNDALU), 2025-2026 கல்வியாண்டிற்கான 3 ஆண்டு எல்.எல்.பி. (LL.B) சட்டப்படிப்பு…

4 hours ago

தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (11-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

5 hours ago