jeyakumar [Imagesource : NDTV]
இரண்டு ஆண்டுகளாக காவல்துறையை ஏவல்துறையாக மட்டுமே வைத்திருந்து செய்த கொடுஞ்செயல்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை என ஜெயக்குமார் ட்வீட்.
வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்த அமைச்சர் செந்தில் பிலாஜி, காலை 5 மணிக்கு தூங்கி கொண்டு இருப்பவர்களை அவர்கள் எழுந்து வருவதற்கு சற்று கால தாமதம் ஆகலாம்.அதற்குள் அவசரப்பட்டு சுவர் ஏறி குதிக்கின்றனர்.
அதிகாரிகளின் பாதுகாப்பு இல்லாமல் தனியாளாக வந்ததால், அவரிடம் அடையாள அட்டை கேட்டனர். இருப்பினும், அதிகாரிகளின் சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இதே போல் தான் என்னை இரவில் கைது செய்து அன்றிரவு 12 மணிக்கே நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர் காவல்துறை. இரண்டு ஆண்டுகளாக காவல்துறையை ஏவல்துறையாக மட்டுமே வைத்திருந்து செய்த கொடுஞ்செயல்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை… ஊருக்கு ஒரு நியாயம்! உங்களுக்கு ஒரு நியாயமா?’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…