eps-modi [Imagesource : Twitter Rameshmurugesan]
தென்னிந்திய பிரதிநிதியாக பிரதமரை வரவேற்க பழனிசாமிக்கு வாய்ப்பளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில்,பிரதமர் மோடி தலைமையில் என்டிஏ ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் 39 கட்சியின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்திலிருந்து அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கூட்ட அரங்கிற்கு வருகை புரிந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிபூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தென்னிந்திய பிரதிநிதியாக பிரதமரை வரவேற்க பழனிசாமிக்கு வாய்ப்பளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் பிரதமர் மோடிக்கு அருகிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டத்தில் இருக்கை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…