அரசியல்

வெளிநாட்டு பயணத்தை முடித்து இன்று சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Published by
லீனா

வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழகம் திரும்ப உள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 23-ஆம் தேதி 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். சென்னையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலகம் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காகவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் இந்த பயணத்தை மேற்கொண்டார்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் தனது பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 25-ஆம் தேதி ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்திற்கு சென்றார். இந்த அரசு முறை பயணங்களின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழகம் திரும்ப உள்ளார். தமிழகம் திரும்பும் முதல்வருக்கு சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…

6 minutes ago

தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!

சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…

26 minutes ago

நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சிதம்பரம் ரயிலில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின்.!

கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…

1 hour ago

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு அதிரடி மாற்றம்.!

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…

2 hours ago

லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து – 4 பேர் பலி.!

சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…

2 hours ago

பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி.., இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…

3 hours ago