mkstalin [Imagesource : Representative]
வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழகம் திரும்ப உள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 23-ஆம் தேதி 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். சென்னையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலகம் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காகவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் இந்த பயணத்தை மேற்கொண்டார்.
இந்த நிலையில் சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் தனது பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 25-ஆம் தேதி ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்திற்கு சென்றார். இந்த அரசு முறை பயணங்களின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழகம் திரும்ப உள்ளார். தமிழகம் திரும்பும் முதல்வருக்கு சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…