Congress president Mallikarjun Kharge [Image Source : Twitter/@ANI]
மும்பையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த சுமார் 60 தலைவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, இந்திய கூட்டணி கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறோம். கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் நோக்கம் ஒன்றுதான். எங்களது நோக்கம் விலைவாசியை குறைப்பது, வேலையின்மையை ஒழிப்பது தான்.
சமையல் எரிவாயு விலையை ரூ.ஆயிரத்துக்கு மேல் உயர்த்திவிட்டு, ரூ.200 குறைத்து நாடகம் ஆடுகின்றனர். பாஜக அரசுக்கு எளியோர் மீது அக்கறை இல்லை. பணக்காரர்களைப் பற்றியே கவலை கொள்கிறது. இந்தியா ஒரு போருக்கு தயாராகிறது. அந்தப் போரில் நாங்கள் இந்தியாவிற்காக நிற்கிறோம்.
தேர்தல் வரும்போதெல்லாம் விலை குறைப்பு மேற்கொள்வதே வழக்கமாகக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. புலனாய்வு அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை மத்திய அரசு மிரட்டி வருகிறது. விலைவாசி உயர்வை கண்டித்து மாநிலம் தோறும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
ஊழல் தடுப்பு குறித்து பேசும் பாஜக தான் மிகப்பெரிய ஊழலை செய்து வருகிறது. பயப்பட மாட்டோம், ஊழலையும் அடக்கு முறையையும் எதிர்த்து போராடுவோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…