நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியால் பிரதமர் பதவி ராஜினாமா செய்தார் கே.பி. ஓலி.
நேபாளத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த மாவோயிஸ்ட் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றது.இதனையெடுத்து திங்கள்கிழமை நேபாள பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் பிரதமர் கே.பி. சர்மா ஓலி க்கு 93 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர், மேலும் 124 பேர் எதிராகவும், 15 பேர் நடுநிலையாகவும் இருந்தனர், இதனால் பிரதமர் ஓலி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவினார்.
மேலும் சபையில் 271 பேரில் 232 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர், அதில் வாக்களித்த அல்லது சபயைவிட்டு வெளியேறாதவர்களில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 28 அதிருப்தி உறுப்பினர்கள் – ஒருங்கிணைந்த மார்க்சிச லெனினிசவாதிகள் அடங்குவர். மேலும் இது செப்டம்பர் 2015 இல் அறிவிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் தோல்வியுற்ற முதல் நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகும்
பாராளுமன்றத்தில் தோல்வியை எதிர்கொண்ட கே.பி. ஓலி, 38 மாதங்கள் அரசாங்கத்தை வழிநடத்திய பின்னர் அதிகாரத்திலிருந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…
டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…
சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…
விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…