அரசியல்

இந்த கோர விபத்து ரயில்வே நிர்வாக குளறுபடியினால் தான் ஏற்பட்டது என்பதை எவரும் மறுக்க இயலாது – கே.எஸ்.அழகிரி ட்வீட்

Published by
லீனா

ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதி நடந்த கோர விபத்து ரயில்வே நிர்வாக குளறுபடியினால் தான் ஏற்பட்டது என்பதை எவரும் மறுக்க இயலாது என கே.எஸ்.அழகிரி ட்வீட். 

ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில்,  800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர்.

இந்த விபத்து குறித்து அமிலநாடு காங்கிரஸ் கமிட்டிங் தலைவர் கே.எஸ்.அழகிரி அதனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒடிசாவில் நேற்று நடந்த கோர ரயில் விபத்தில் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதால் 250-க்கும் மேற்பட்டோர் பலியான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இதில் சென்னையை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலியான செய்தி மேலும் துயரத்தை ஏற்படுத்துகிறது.

இந்த சம்பவம் நடைபெற்ற உடனே தமிழக முதலமைச்சர் சென்னை எழிலகத்தில் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்தியதோடு, விபத்து நடந்த இடத்திற்கு தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோரை அனுப்பி நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியிருக்கிறார். கட்டுப்பாட்டு அறைக்கு முதலமைச்சர் நேரில் சென்று நிவாரணப் பணிகளை கண்காணித்ததோடு கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்திருக்கிறார்.

ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதி நடந்த கோர விபத்து ரயில்வே நிர்வாக குளறுபடியினால் தான் ஏற்பட்டது என்பதை எவரும் மறுக்க இயலாது. கடந்த சில ஆண்டுகளாகவே ரயில் விபத்துகளில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் விபத்து எண்ணிக்கை 2014-15 இல் 135, 2015-16 இல் 107, 2017-18 இல் 73 என விபத்துகள் நிகழ்ந்து வருவது ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை வெளிப்படுத்துகிறது. 2014 முதல் மூன்று ஆண்டுகளில் 27 ரயில் விபத்துகளில் 259 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.

இத்தகைய விபத்துகளுக்கும், மரணங்களுக்கும் யார் பொறுப்பு ? புல்லட் ரயில், வந்தே பாரத் ரயில் என கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்கிற பா.ஜ.க. அரசு, ரயில் விபத்துகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான ரூபாய் 40,000 கோடி நிதியை ஏன் ஒதுக்கவில்லை ? ஒடிசாவில் நடந்த இந்த கோர விபத்திற்கு யார் பொறுப்பு ? 1956 ஆம் ஆண்டு அரியலூரில் ரயில் விபத்து ஏற்பட்ட போது அன்றைய ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பதவி விலகிய முன்னுதாரணத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அதைப்போல, ஒடிசாவில் ஏற்பட்ட கோர விபத்திற்கும் இன்றைய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தனது பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்த ரயில் விபத்திற்கு உரிய பொறுப்பை ஏற்கிற வகையில் அவர் பதவி விலகுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். ஒடிசா ரயில் விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு மத்திய அரசு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறது. இந்த இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி மரணமடைந்தவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இழப்பீட்டுத் தொகையை வழங்குவதனால் இறந்த உயிர்கள் மீண்டு வரப் போவதில்லை என்றாலும் ஒடிசாவில் நடந்த இந்த கோர விபத்தை படிப்பினையாக ஏற்று, இனி ரயில் விபத்துகள் நடக்காமல் தடுக்க ரயில்வே அமைச்சகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதில் காட்டுகிற ஆர்வத்தை ரயில்வே பாதுகாப்பில் காட்ட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

9 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

10 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

12 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

12 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

14 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

14 hours ago