RNRavi
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய குழுவை நியமித்து செப்டம்பர் 13-ல் அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது. அதில், தமிழக ராசு துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க ஆளுநர் ரவி நியமித்த தேடுதல் குழுவில் யூ.ஜி.சி. பிரதிநிதியை நீக்கியிருந்தது. இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கத் தேர்வுக்குழுவைத் தமிழ்நாடு அரசு நியமித்ததற்கு ஆளுநர் ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதன்படி, துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் ஒப்புதல் இன்றி அமைக்கத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பாணையைத் திரும்பப் பெற உயர்கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், தனது அனுமதியின்றி தன்னிச்சையாக அரசிதழில் தேடுதல் குழு அமைக்கப்பட்டதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தனி தேடுதல் குழு அமைத்துள்ளதாகவும், தேடுதல் குழுவை நியமிக்க உயர் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…